மணநாறு
சீரடியே
தனக்குவமை
இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவல் மாற்றல் அரிது
தனக்கு ஒப்பிடும்படி இல்லாத பரம் பொருளான இறைவன் தாள் அடிகளை
நினைக்கின்றவர்கள் தவிர ஏனையோர்க்கெல்லாம் தங்கள் மனக்கவலை ஒழிப்பது அரிதான காரியம்.
பிறவிப்
பெருங்கடல் நீந்துவார் நீந்தார்
இறைவன்
அடி சேராதார்
இப்பிறவியாகிய
மாயக்கடலை கடப்பதற்கு இறைவனின் திருவடிகளை பற்றியவர்களால்தான் முடியும். மற்றவர்களால்
முடியாது.
குறிப்பிட்ட
ஒரு சமயத்தைச் சாராமல் தமிழில் மாபெரும் மறை நூலாகவும் மனித இனத்துக்கே வாழ்வாங்கு
வாழ ஒரு வழிகாட்டியாகவும் இருக்கின்ற திருக்குறள்தான் மேற்கண்டவாறு கூறுகிறது.
இப்படியிருக்க
தமிழ் இலக்கியத்தின் கண்களாக விளங்குகின்ற சைவ வைணவ நூல்களெல்லாம் இறைவனின் பெருமையை
தேனூரும் திருப்பாக்களில் வர்ணிப்பதில் வியப்பே இல்லை எனலாம்.
நமச்சிவாய
வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும்
என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி
ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க
ஆகமம்
ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன்
அநேகன் இறைவன் அடிவாழ்க
என்பதாகத்தானே
திகட்டாத தீந்தமிழ் திருவாசகம் தொடங்குகிறது!. திருநல்லுரில் அப்பர் ஸ்வாமிகள் வேண்ட
அவர் சிரத்தில் தன் திருவடியை சூட்டி (‘நனைந்தனைய திருவடி என்தலைமேல் வைத்தார்’) அவரை
தடுத்தாட் கொண்டவர் இறைவன்.
பூ
ஆர் அடிச்சுவடு என்மேல் பொறித்துவை! போக விடில்
மூவா
முழுப்பழி மூடும்கண்டாய்
பூவார்
அடிச்சுவடென் தலைமேற்பொ றித்தலுமே
தேவான வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ. -திருவாசகம்
மேற்கூறிய
மேற்கோள்கள் தமிழ் சைவ நன்நூல்கள் குறிக்கும் திருவடி பெருமைகளில் ‘ தினையளவு பிளவளவுதான்.
இன்னும்
வைணவ நன்நூல்கள் யாவும் ‘வெள்ள வெளுக்க நிற்கும் நாராயணின் திருவடிகளின் மகிமையை உணர்த்தும்
நூல்களாவே இருக்கின்றன. பெரியாழ்வார் திருவரங்க மங்களா சாசனம் செய்யும் போது காவிரித் தென்னரங்கன் எஞ்ஞான்றும் எம்பெருமான் இணையடிக்கீழ்
இணைபிரியாது இருப்பர்தாமே- 9-வது திருமொழி என துதிக்கின்றார்.
தொண்டர்களுக்கு
இறைவனின் நாமமும் உருவமும் எவ்வளவு உயர்வோ அதைவிட பன்மடங்கு உயர்வாக அவர்கள் கருதுவது
அவன் திருவடிகளைத்தான்.
சிவகுமாரனாம்
திருமுருகனை சித்ர கவித்துவ, சத்த மிகுந்த திருப்புகழ் பாமாலையாலும், திருவகுப்புகளாலும்,
அலங்காரங்களாலும் ஆவலுடன் பாடி உள்ளம் உருகி, அழுது தொழுது நிஷ்களமான பதி பாவனையுற்று
அநுபூதியில் அப்படியே அடைவித்து ஆறுமுகனால் ஆட்கொள்ள பெற்ற அருணகிரிநாதர், குமரனின்
பாத பங்கயங்களைப் போற்றிப் புகழ்கிறார். முருகவேள் பன்னிருத் திருமுறையை கற்றோரும்
மற்றோரும் படித்துச் சுவைத்து இசைபாடி இன்பம் துய்த்திருக்கிறார்கள்.
அவ்வின்பத்தின் எழுத்து வடிவம்தான் வரவிருக்கும்
கட்டுரை
“நின்னிற்
சிறந்த நின் தாள் இணையவை திருவடியே வீடாயிருக்குமென்றார்”
என்பதற்கிணங்க
“வரிசை தரும் பதம் அது பாடி வளமொடு
செந்தமிழ்
உரைசெய்ய அன்பரு மகிழ வரங்களும் அருள்வாயே”
என்றும்
“நின்பதயு
கப்ர சித்தி யென்பனவ குத்து ரைக்க நின்பணி தமிழ்த்ரயத்தை
அருள்வாயே”
( தமிழ் த்ரயம் – முத்தமிழ்)
“நான்
படும்பாடு தொலைத்துக் கழிக்க அக்ருபை தேடும் என்னை தற்புரக்க
உன்
திரு பாதுகையைப் பற்றி நிற்க வைத்து எனை அருளாதோ”
என்றும் அருணகிரியார் வேண்டுகிறார்.
அவை எப்பேற்பட்ட திருவடிகள்!
தேவர்
தலையிலும், குருநாதர் பாட்டிலும் பட்ட திருவடிகள் தினைப்புனத்திலும் திரிந்தனவாம்.
அவை ஒளியுடைய கோடி சூரியனை ஒத்த திருவடிகளாகும். அவை ‘பரிமள மதுகர வெகுவித மலரடிக’ளாம். அதனால்தான் ‘போது கங்கையின் நீர் சொரிந்து இருபாத
பங்கையமே வணங்கி, இரவினிடை துயிலுகிலினும் கனவிலும் நனவிலும் மறவாமல் இருப்பதானால்
மரணப்ரமாதம் நமக்கிலையாம் என முழங்குகிறார்.
குரு
நாதருக்குத் தன் தேவனின் திருவடிகள் தான் எத்தனை எத்தனை விதங்களாக தோற்றமளிக்கின்றன!
அவர் விவரிக்கும் உவமைகளை என்னவென்பது? உவமைகளுக்கு காளிதாஸன் மட்டும் தான் சொந்தம்
கொண்டாட வேண்டுமா என்ன? சந்தமிகுந்த சொற்களால் ஆண்டவனின் பாதங்களை வர்ணிக்கும் பொழுது
அச்சொற்களுக்கே ஒரு தனி அழகு அல்லவா வந்து விடுகிறது! அவற்றுள் சில பொறுக்கு மணிகள்
இதோ
‘சுந்தர
பொன்னிய பாதம்’, ‘சிவமான பதம்’, ‘சகலரும் மெச்சும் பரிமள பத்ம தருண பதம்’, ‘அருண ஒளி
வீசு நளின இரு பாதம்’, ‘முடிவிலா திருவடி’, ‘தண்டைய பங்கயம்’, ‘வேதா முதல் விண்ணவர்
சூடு மலர்ப் பாதம்’, ‘ஷடக்ஷரசூழ் பாதம்’, ‘உம்பர் தொழும் பாதம்’, ‘சேமகோமள பாத தாமரை’,
‘மெய்ப் பதமான சேவடி’, ‘சோதி ஒளி பாதம்’,
‘அரிபிரமர் அளப்பரிய பத கமலம்’, ‘கோமளப் பதயுகள புண்டரீகம்’, ‘அற்புத சீர்பாதம்’,
‘சிவயோக பதம்’, ‘ரிபு தீர் உனதடி’. போறுமா?
முருகனின்
திருவடிகள் சிவபிரானாலும் வணங்கப்பட்டன என்று
மகிழ்ந்து நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். கொன்றை மாலையணிந்த சிவபிரானின் சிரத்தை திருவடியில் ஏற்றுக்கொண்டதால் அதன் பெருமையை என்னவென்பது!
“ கொன்றை அணிந்த சிரம் சரண அங்கிகாரா” விஷப்பாம்புகளை அணிந்தவராம் சிவனின் ஜடாமுடியில்
உள்ள அழகிய கொன்றை மற்றும் வாசமலர்கள் ஆறுமுகனின் திருவடிகளுக்கும் அழகு செய்கின்றனவாம்!
“கடுவுடையாரா
நிரைத்த சடில முடி மீது வைத்த கடிய மலர்தரித்த கழல் வீரா”.
ஆதிநாதனாகிய
சிவபிரான் ஸ்வாமிநாதனின் திருவடிகளளை பேணித் தொழுது நிற்கும் அழகு
“தண்டையில்
கழல் வேணித் தேவி பாகம் பெருந்தாதி நாதன் தொழும் தேசிகா”
என்பதிலிருந்து
தெரிகின்றது.
“தோலால்
சுவர் வைத்து நாலாறு காலில் சுமந்தியிரு காலால் எழுப்பி தசை கொண்டு மேய்ந்த” இந்த மனித
உடலுக்கே “அரைவடங்கள் கட்டி, சதங்கை இடு குதம்பை பொற்சுட்டித் தண்டை” முதலிய அணிந்து
அழகு பார்க்கிறோம். சுத்த நிர்குணமான பரிபூரணனோ ‘அருண கோடியினாரொளி வீசிய தருண வாண்முக’
மேனியனாய் உருவெடுத்து வரும் பொழுது அவன் அணிந்திருக்கும்
அணிகலங்கலங்கள் அவனால் அழகு பெருகின்றன. அப்பேற்பட்ட அழகன் தன் பாதங்களுக்கு அணிந்திருக்கும்
நகைகளை அருணகிரிநாதர் ஞானகண்களால் கண்டு களிக்கின்றார். அவைகளை ‘செஞ்சதங்கை கொஞ்சு
பிஞ்சு பாதம்’ முதல் ‘படி அதிர வீசி வரும் கழல் பாதம்’ வரை வர்ணித்திருக்கிறார். நாமும்
நம் ஊணக்கண்களால் முடியாவிட்டாலும் மனக்கண்களால் காண முயலாம்.
‘தண்டையணி
வெண்டையங் கிண்கிணி சதங்கையும் தண் கழல்’ சிலம்புடன் கூடிய பாதங்கள் கழல் பூட்டிய திருவடிகள்,
பொன்னையும் ரத்தனத்தையும் தனது ஒளியினால் வாட்டமுறச் செய்கின்றனவாம்.
‘கனக
மணி வாட்டு மருவு கழல் பூட்டு கழலிணைகள்’
வேத
மந்திரத்தை ஒலிக்கின்றனவாம்
‘செழுமறை
அம்சொல் பரிபுர’
‘மறை
சதுர்வித தெரிந்து வகை சிறு சதங்கை கொஞ்சு மலரடி’
தாளத்துடன்
ஒலிக்கும் அணிகலங்கள்,
‘தண்டை
பொற்சித்ர விசித்ர தரு சதங்கை தொத்தொத்து முழங்கும் சரண கஞ்சத்திற் பொற்கழல் கட்டும்
பெருமாள்’
‘இனிய
நாதச் சிலம்பு புலம்பிடு அருண ஆடக கிண்கிணி’
என
இசைபாடும் நூபுரங்களை அணிந்தவை அவை
‘கனக
மணி வயிர நூபுராரிய கிரண் காரண அபிராம கோமள கமளயுகம்....’
‘ப்ரபை
வீசும் தண்டைகள் கலின் கலின் கலினென,
கிண்கிணி
கிணின், கிணின் கிணின், கிணினென
தண்கொலுசுடன்
சிலம்பு அசைய இரு பரிமள
பங்கையப்
பாதங்கள்’
‘தண்டையஞ்சிலம்பல
வெண்டையஞ்சல்சலன்
சலலென்று
சஞ்சிதஞ் சதங்கை’
அடியாரைக்
காக்க ‘அஞ்சல் அஞ்சல்’
என்று
ஒலிக்கின்றனவாம்.
இவைத்
தவிர அவன் பாதங்களில் சேரும் மலர்களோ அழகுக்கு அழகு செய்கின்றன. அவன் திருவடியே தாமையாகிய
புஷ்பம். அவற்றைச் சுற்றி, அன்றாடம் பக்தர் குழாம் சொரியும் மலர்கள் குவிந்துடும்.
அவைகளில் ஊரும் தேனுக்காக வண்டுகள் ரீங்கரமிட்டு ஸ்ரீ ராகம் சீராக ஓதுகின்றனவாம்.
“சீராக
மோது நீப பரிமள இருதாளும்”.
நன்
மலர்களைக் கொண்டு வரும் பக்தர்கள் இறைவனது பாத திருவடிகளைக் கண்டு அவை அன்றலர்ந்த மலரோ
என்று வியப்புருகின்றராம்.
“சீதாள
மாமலர் தொடுத்த பக்தர்கள் சீராடி நாண் மலர் எனப் பிரியப் படிசீர் பாத’.
அம்மலர்களில்
சிலவற்றை பார்க்கலாமா?
குராமலர்,
விளாமரத்தின் இளம் தளிர்கள், கடப்பமலர், மகிழம்பூ, முல்லை, குவளை, வெட்சி மலர். அருகம்புல்,
கரந்தை முதலிய பச்சிலைகளும் முருகனின் திருவடியை அணுகும் பேறு பெற்றிருக்கின்றன.
திருவடியின்
பெருமை
திருவடியின்
தூசியானது பூமியில் உள்ள மலைகள் ஆகும். ‘உனது பததூள் புவனகிரிதான்’. திருமால், பிரம்மா,
தேவர்கள் எல்லோரும் கூட அறிய முடியாத பெருமை வாய்ந்த திருவடிகள்.
“அரிய
சமய ஒரு கோடி அமரர் சரணர் சத கோடி
அரியும்
அயனும் ஒரு கோடி இவர் கூடி
அறிய
அறிய அறியாத அடிகள்”
“ஆலமுண்ட
கோன் அகண்ட லோகமும்
உண்ட
மால் விரிஞசன் ஆரணங்கள்
ஆகமங்கள்
புகழ் தாள்”
வேதங்கள்
போற்றுதற்கு அரிதான ஒளியாக விரிந்துள்ள மலரடியாகிய தாமரை
“மறை
போற்றரிய ஒளியாய்ப் பரவு மலர் தாட் கமலம்”
தூய்ந்த
அன்பர்களின் நாவினால் தொடுக்கின்ற பாடல்களின் மணம் வீசுகின்ற பாதரவிந்தம்
“நாவேறு
பாமணத்த பாதாரம்”
தேன்
நிரம்பிய மலர் நிறைந்தும் மோன வழியை திறந்து காட்டின தாமரை போன்றது.
“நறை
விழாத மலர் உகந்த அரியமோன வழி திறந்த நளின பாதம்”
திருவடியை
அணுகும் முறை:
முருகனின்
திருவடிகளை துதிப்பதற்கான வழியை அருணகிரிநாதரே நமக்கு சொல்கிறார். சிலம்பணிந்த திருவடிகளை
நாள்தோறும் நித்தம் நினைக்க வேண்டும்.
“நாத
சதகோடி மறை ஓலமிடு நூபுர உனது
பாத
தாமரை நலமாக நான் அனுதினா தினமே”
அன்புடன்
தினந்தோறும் திருவடியை (அதன் பெருமைகளைப்) பயம் இல்லாமல் தைரியத்துடன் ஓத வேண்டும்.
“நேசமாய்
நித்தம் நிற்றாளை நீளச்சமற்று ஓத”
அழகிய
சொற்களால் அமைந்த பாடல்களால் திருவடிகளை பாடித் தொழ வேண்டும்.
“சொற்கோலத்தே
நற்காலைச் சேவிப்பார்”
அழகிய
பாத தாமரைகளை நெஞ்சில் நிறுத்தி அவன் புகழ் கூறும் திருப்புகழ் பாடல்களை நெஞ்சில் நிறுத்தி
அவன் புகழ் கூறும் திருப்புகழ் பாடல்களை தினந்தோறும் பாடவேண்டும்.
“பாத
பங்கய உற்றிட உட்கொண்டு ஓதுகின்ற திருப்புகழ் நித்தம் பாடு...”
திருவடிகளின்
அழகே நமக்குப் பற்றுக் கோடாகும் என்று உணர்ந்து ( மானிடர்களாகிய நாம்) தேவர்களைப் போல
தொண்டுற வேண்டும்.
“அருண
மணி வெயிலிலரு தண்டையம் பங்கயங்
கருணை
பொழி கழலி லந்தமுந் தம்பமென”
“அழகு
பெற தெறிவருடி அண்டருந் தொண்டுறு..”
பக்தியுடன்
மனம் உருகி நாள்தோறும் திருவடிகளைப் பற்ற வேண்டும்.
“பக்தியுடன்
உருகி நித்தம் உனதடிகள் பற்று அருள்”
“நித்த
நினதாளில் வைத்ததொரு காதல்
நிற்கும்
வகை ஓத...அருள்வாயே. என்றும் பாடுகிறார் அருணகிரியார்.
இது
போன்று அவர் இயற்றியுள்ள மொத்தப் பாடல்களில் முக்கலே மூணு வீசம் பாடல்களில் அவன் பாதங்களின்
மகிமை பாடியும் அவர் மனம் அலுக்கவில்லை போலும். தான் பாடிய வகுப்புகளிலும் முருகனின்
பாதங்களுக்குத் தனிச் சிறப்பு சேர்த்து “சீர் பாத வகுப்பு” என்ற அற்புதமானதோர் பாமாலைத்
தொடுத்துள்ளார்.
’தனதனன’
என்ற சீரான சந்தத்தில் முப்பத்திரண்டு வரிகளில் இயற்றியுள்ள இவ்வகுப்பு, அவனுடை பாதங்களின்
மேன்மையை வெவ்வேறு கோணங்களில் எடுத்துரைக்கிறார். சில வரிகளைப் படித்து அத்தமிழைச்
சுவைத்து, அவை எடுத்துரைக்கும் எம்பெருமானின்
சரணகமல்ங்களின் மேன்மையை உணர்ந்து ஆண்டவனின் பாதமலர் மீது போத மலர் தூவித் துதிப்போமாக.
உததியிடை
கடவுமர கதவருண குலதுரக வுபலளித கனகரத ...... சதகோடி சூரியர்கள்
உதயமென
அதிகவித கலபகக மயிலின்மிசை யுகமுடிவின் இருளகல ...... ஒருசோதி வீசுவதும்
முருகசர
வணமகளிர் அறுவர்முலை நுகருமறு முககுமர சரணமென ...... அருள்பாடி யாடிமிக
மொழிகுழற
அழுதுதொழு துருகுமவர் விழியருவி முழுகுவதும் வருகவென ...... அறைகூவி யாளுவதும்
முடியவழி
வழியடிமை யெனுமுரிமை யடிமைமுழு துலகறிய மழலைமொழி ...... கொடுபாடும் ஆசுகவி
முதலமொழி
வனநிபுண மதுபமுக ரிதமவுன முகுளபரி மளநிகில ...... கவிமாலை சூடுவதும்
மதசிகரி
கதறிமுது முதலைகவர் தரநெடிய மடுநடுவில் வெருவியொரு விசையாதி மூலமென
வருகருணை
வரதனிகல் இரணியனை நுதியுகிரின் வகிருமட லரிவடிவு ...... குறளாகி மாபலியை
வலியசிறை
யிடவெளியின் முகடுகிழி படமுடியவளருமுகில் நிருதனிரு ...... பதுவாகு பூதரமும்
மகுடமொரு
பதுமுறிய அடுபகழி விடுகுரிசில்மருகனிசி சரர்தளமும் ...... வருதார காசுரனும்
மடியமலை
பிளவுபட மகரசல நிதிகுறுகி மறுகிமுறை யிடமுனியும் ...... வடிவேல னீலகிரி
மருவுகுரு
பதியுவதி பவதிபக வதிமதுர வசனிபயி ரவிகவுரி ...... யுமையாள்த்ரி சூலதரி
வநசைமது
பதியமலை விசயைதிரி புரைபுநிதை வநிதையபி நவையநகை ...... யபிராம நாயகிதன்
மதலைமலை
கிழவனநு பவனபய னுபயசதுர் மறையின்முதல் நடுமுடிவின் ...... மணநாறு சீறடியே